நேரலையில் மயங்கிய செய்தி வாசிப்பாளர் - என்ன நடந்தது?

66பார்த்தது
கொல்கத்தாவில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகத்தில் பிரபல நடிகையும், தொகுப்பாளருமான லோபாமுத்ரா சின்ஹா ​​பணியாற்றி வருகிறார். கடந்த 18ஆம் தேதி நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால், உடனே நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது ஃபேஸ்புக் லைவ் மூலம் தான் மயங்கியதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதன்படி, வெயிலின் உஷ்ணத்தால் பிபி குறைந்து சுயநினைவை இழந்ததாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி