40 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

564பார்த்தது
திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது.

திண்டுக்கல் மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன், ஆய்வாளர் புவனேஸ்வரி, சார்பு ஆய்வாளர் முத்துக்குமார், போலீசார் தங்கப்பாண்டி, ஜோசப் மெரின், மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளபில் திண்டுக்கல் மற்றும் விருவீடு, நிலக்கோட்டை, வடமதுரை உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்ற தேனியைச் சேர்ந்த கழுவன், நிலக்கோட்டை அழகம்பட்டியைச் சேர்ந்த செல்லச்சாமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சுரேஷ்குமார், வடமதுரையைச் சேர்ந்த கிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 40 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி