ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த மழை நீர்

1559பார்த்தது
பழனியில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால், நகரின் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பழனி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மருத்துவர்கள் அறை, நோயாளிகள் அறையில் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி