பழனி: பட்டாசு வெடித்து விபத்து

53பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனி இட்டேரி சாலையில் உள்ளது காமாட்சி அம்மன் கோவில். இக்கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக பணிகளுக்காக கோவில் கோபுரங்களை சுற்றி ஓலைகள் வைத்து மறைக்கப்பட்டு உள்ள நிலையில், இன்று அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த விசேஷத்திற்காக பட்டாசு வைக்கப்பட்டபோது பட்டாசு நெருப்பு பறந்து கோவில் கோபுரத்தின் மீது விழுந்ததில் கோவிலை சுற்றி மறைக்கப்பட்டுள்ள ஓலைகள் எரிந்து நாசமானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி