பழனி: கருப்பண்ணசாமிக்கு படையல்

53பார்த்தது
பழனி: கருப்பண்ணசாமிக்கு படையல்
திண்டுக்கல் மாவட்டம்
பழனி அருகே கோம்பை பட்டியில் கோயில் விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஐந்தாயிரம் பக்தர்களுக்கு அசைவ உணவு தயாரித்தனர். 20க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இணைந்து சாதம், ஆட்டுக்கறி குழம்பு, வறுவல், ரசம் உள்ளிட்டவை தயார் செய்தனர். கருப்பண்ணசாமிக்கு படையல் வைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். வரிசையில் வந்த பக்தர்கள் அன்னதான உணவை பெற்று சாப்பிட்டனர்.

தொடர்புடைய செய்தி