பழனி அடிவாரம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கிரிவலப் பாதையில் பல ஆண்டுகளாக கை வியாபாரிகள் பக்தர்களிடம் வியாபாரம் வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலை
நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒராண்டுக்கு முன்பு திருதொண்டர் சபை ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்படி திருக்கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றபட்டது. இந்நிலையில் கிரிவலபாதையில் எந்த விதமான வாகனங்களும் செல்லாதவாறு அடைக்கபட்டது. மேலும் இரண்டு மாதங்களாக கை வியாபாரிகளை கிரிவலப் பாதையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து 300 குடும்பங்களும் வருமானமின்றி தவித்து வருகின்றனர். தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் வறுமையில் வாடும் 300 குடும்பங்களின் நலனில் அக்கறை கொண்டு கை வியாபாரிகளை கிரிவலப் பாதையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இந்த ஆர்பாட்டத்தில் தலைமையாக பொதினிவளவன் ,
செந்தில்குமார் மற்றும்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து மற்றும் அடிவாரம் கை வியாபாரிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு தேவஸ்தான நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.