மரத்தடியில் உள்ள மந்தையில் அமர்ந்து வாக்கு சேகரிப்பு

581பார்த்தது
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார். பிரச்சாரத்தில் புது புது வியூகங்கள் அமைத்து தொழிலாளர்கள், வியாபாரிகள். விவசாயிகளுடன் இணைந்து பணி செய்தும் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தலக்குண்டு, செங்கட்டாம்பட்டி, மல்லணம்பட்டி, கோம்பை பட்டி, எம். குரும்ப பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மதியம் 12. 30 மணியளவில் பாமக வேட்பாளர் கவிஞர் திலகபாமா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது எம். குரும்ப பட்டியில் பிச்சாரத்தில் ஈடுபட்ட போது அங்கு மரத்தடியில் உள்ள மந்தையில் வேட்பாளர் திலகபாமா ஊர் பொது மக்களுடன் அமர்ந்து அவர்களுடைய குறைகள் கேட்டறிந்தார். பின்னர். விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்மணியான எனக்கு விவசாயிகளுடன் துயர் துடைக்க, பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விவசாயிகளின் சின்னமான மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி