திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகில் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலையில் 30 அடி பள்ளத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த எட்டு வாலிபர்கள் சுற்றிப் பார்ப்பதற்காக கொடைக்கானலுக்கு சொகுசு காரில் வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பெருமாள் மலை அடுத்து 1 கிலோமீட்டர் தொலைவில் அந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 30 அடி பள்ளத்தில் இறங்கியது. இதனால் கேரளா கண்ணூரை சேர்ந்த மூஜித் ரகுமானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். பின்னர் அந்த ஆம்புலன்ஸ் மூலமாக முஜீத் ரகுமானை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தினால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பானது.