சட்ட விரோதமாக மது விற்ற 45 பேர் கைது

57பார்த்தது
திண்டுக்கல் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்ற 45 பேர் கைது மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை.

திண்டுக்கல் மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன், ஆய்வாளர்கள் புவனேஸ்வரி, லாவண்யா, சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார் சரவணன் ஆகியோர் திண்டுக்கல், நிலக்கோட்டை, வடமதுரை, வேடசந்தூர், எரியோடு, ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சட்ட விரோதமாக மதுவிற்ற ராஜேந்திரன், முத்துசாமி, ரமேஷ், பிரபு, ராமகிருஷ்ணன், முருகன் உட்பட 45 பேரை சனிக்கிழமை மதியம் 12: 30 மணியளவில் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 600 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி