நத்தம் அருகே பாலத்தில் உட்கார்ந்திருந்தவர் தவறி விழுந்து பலி

6017பார்த்தது
நத்தம் அருகே பாலத்தில் உட்கார்ந்திருந்தவர் தவறி விழுந்து பலி
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி- பிலாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (31). கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை மாலையில் தனது வீட்டின் அருகே தரைப்பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்ததில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி