நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

79பார்த்தது
திண்டுக்கல் பேகம்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இறை வழியில் அடிப்படையில் நோன்பு அன்று எந்த ஏழையும் உணவருந்தாமல் இருக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக பித்ரா வழங்கப்படுகிறது. ‌ ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் புதன்கிழமை 300 நபர்களுக்கும், வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் 200 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஷேக் பரீத் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் சுலைமான் சுகைல், மாவட்ட துணைச் செயலாளர் யாசர் அரஃபாத், நகரத் தலைவர் ஜாபர் சாதிக் தமுமுக நகரச் செயலாளர் யாசர் அரஃபாத், மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் இப்ராஹிம், நகர பொருளாளர் நிஸ்தார், ஊடக பிரிவு மண்டல செயலாளர் ஷாகுல் ஹமீது உட்பட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி