ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல் - 4 பேர் கைது

2605பார்த்தது
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய நான்கு பேர் கைது.

திண்டுக்கல் வேடப்பட்டி ஆசாத் நகரை சேர்ந்தவர் முஜீப் ரஹ்மான் வயது 35. ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் நேற்று இரவு திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது முஜீப் ரகுமானிடம் சிலர் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதில் காயம் அடைந்த முஜிப் ரகுமான் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக புதன்கிழமை மதியம் 1 மணி அளவில் கண்ணார்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் வீராசாமி, ராஜா, திருமலைசாமிபுறம் ஆண்டி சாமி, குள்ளனம்பட்டி மணிகண்டன் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி