ஐஏஎஸ் படிப்பது தனது லட்சியம் என சாதனை மாணவி பேச்சு

50பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரோட்டு புதூரை சேர்ந்தவர் விவசாயி கருப்புசாமி இவரது மனைவி ரஞ்சிதம் இவர்களது மகள் காவிய ஸ்ரீயா ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கொசவபட்டி அக்ஷயா அகாடமி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதி இருந்தார்

இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்தார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி அளவில் மாணவி நம்மிடம் தெரிவித்த பொழுது எங்களது குடும்பம் விவசாய குடும்பம், எனது தாய் தந்தையர் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்து வருகின்றனர். அதேபோல் ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். ஆசிரியர்கள் பெற்றோர்கள் உறுதுணையால் தற்போது அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தது.

எனது லட்சியம் ஐஏஎஸ் ஆக வெற்றி பெறுவது விவசாய குடும்பத்தில் இருந்து படித்து தற்போது வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

மாணவியின் தாயார் ரஞ்சிதம் கூறியதாவது

ஒட்டன்சத்திரம் ரோட்டுப்புதூரில் குடியிருந்து வருகிறோம் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம் எங்களின் மகள் காவிய ஸ்ரீயா பத்தாம் வகுப்பில் 499 மதிப்பெண்கள் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அதேபோல் அவருக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி