தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பல மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர் கல்வியை தொடர விரும்புகின்றனர். இந்த நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை புத்தா தெரு, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி சந்தோசஷினி, பொதுத் தேர்வில் 488 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். தாயும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர். குடும்ப வறுமையிலும் படித்து, நல்ல மதிப்பெண்களை பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.