சமண மதத்தை தோற்றுவித்தவரும், முதல் தீர்த்தங்கரருமான ரிஷப நாதர் ஒரு ஆண்டு கடுமையான துறவு மேற்கொண்டு, பின்னர் தமது கைகளில் ஊற்றப்பட்ட கரும்புச்சாறை பருகிய நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. இந்நாளில் சமணர்கள் உண்ணா நோன்பு மற்றும் துறவு பழக்கங்களை கடைபிடிக்கின்றனர். ஓர் ஆண்டு முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா விரதம் இருக்கும் இந்த நோன்புக்கு ‘வர்ஷி தப்’ என்று பெயர். இந்த நோன்பை கடைப்பிடிப்பவர்கள், இந்த நாளில் பாரணை செய்து கரும்புச்சாற்றை அருந்தி தமது தபசை நிறைவு செய்கின்றனர்.