சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு

62பார்த்தது
சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு
பெண் காவலர்களை தகாத முறையில் பேசியதாக சவுக்கு சங்கர் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீது கஞ்சா வழக்கும் பதியப்பட்டது. இந்நிலையில், இன்று சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து CMDA-வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி