மலர் கண்காட்சியையொட்டி 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

52பார்த்தது
மலர் கண்காட்சியையொட்டி 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் கோடை விடுமுறையின் போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் நிலையில், இம்முறை 126வது மலர் கண்காட்சி இன்று 10ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. ஆண்டு தோறும் நடக்கும் இந்த மலர் கண்காட்சியை காண வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகள் வந்துச் செல்ல போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன.