சட்ட விரோதமாக மது பாட்டில் விற்ற நான்கு பேர் கைது

82பார்த்தது
சட்ட விரோதமாக மது பாட்டில் விற்ற நான்கு பேர் கைது
திண்டுக்கல் புறநகர் பகுதியில் மது பாட்டில் நாலு பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் புறநகர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். 115 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் சார்பு ஆய்வாளர்கள் பிரபாகரன், பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த அய்யாவு, ஹென்றிபாபு, குமரேசன், சத்யராஜ் ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 115 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி