திண்டுக்கல்லில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது

4008பார்த்தது
திண்டுக்கல்லில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேரை தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார், வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குளத்து கரையின் அருகில் ஒரு கும்பல் தனியாக அமர்ந்திருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் ஆர். வி நகரை சேர்ந்த அஜித்குமார், முத்தழகு பட்டியை சேர்ந்த குழந்தை இயேசு, கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த பாண்டிய தினேஷ், பூபதி ராஜா, பொன்மாந்துறையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மது குடித்து ஜாலியாக வாழ்வதற்கு பணம் தேவை என்பதால் பைபாஸில் வரும் வாகனங்களை வழி மறுத்து கொள்ளையடிப்பதற்கும் திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரும்பு கம்பி உருட்டு கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி