ஒகேனக்கல்லில் 16 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

73பார்த்தது
தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பொழிய தொடங்கியது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று இரவு 9 ஆயிரம் கன அடியாக இருந்து நீர்வரத்து இன்று அதிகாலை 16000 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி