ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு குளிக்க, பரிசல் இயக்க தடை

84பார்த்தது
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்விப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பொழிந்து வருகிறது இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் கருவிதமாக உள்ள நிலையில் மீண்டும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பொழிய துவங்கி உள்ளதை அடுத்து ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி 16, 000 கனஅடியாக இருந்து வந்தது. மேலும் இந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து இன்று செப்டம்பர் 16 காலை 6 மணி அளவில் 18, 000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை அடுத்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் பரிசளி இயக்கவும் தடை விதித்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் வருவாய் துறை ரோந்து பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி