பென்னாகரம்: ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

76பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவேரி ஆற்றில் தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு பொறுத்து நீரின் வரத்து குறைந்தும் அதிகரித்துமாக காணப்படுகிறது இதன் நிலையில் இன்று அக்டோபர் 12 காலை நிலவரப்படி வினாடிக்கு 7000 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டுள்ளது. மேலும் ஆயுத பூஜை விஜயதசமி வார விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மெயின் அருவி, சினி ஃபால்ஸ், தொங்கும் பாலம் மீன் பண்ணை முதலைப்பண்ணை, உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி