கடத்தூர் வார சந்தையில் வெற்றிலை விலை உயர்வு

56பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது
இந்தநிலையில் நேற்று செப்டம்பர் 15 காலை நடைபெற்ற வெற்றிலை வாரச்சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலைகளை விற்பனைக்காகவும் மற்றும் வாங்குவதற்காகவும் வந்திருந்தனர்.

128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலையின் ஆரம்ப விலை 12, 000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 22, 000 ரூபாய் வரையில் நேற்று விற்பனையாது மேலும் கடந்த வாரத்தைக் காட்டிலும் 2000 ரூபாய் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 4. 40 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனையாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி