நிலத்தகராறில் விவசாயி உயிரிழப்பு, 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது

76பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி நடூர் பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜன் இவருக்கும் உறவினர் களான சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அடுத்த சின்னநாகலூர் காட்டு வளவை சேர்ந்த பழனிச்சாமி மகன்கள் ராஜா, முரளி, அசோக், சேகர், கண்ணா ஆகியோருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. இதற்கிடையே நேற்று செப்டம்பர் 27 அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது நடராஜன் மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொம்மிடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 2 பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி