இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

77பார்த்தது
தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, 3 நாள் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்களுக்கு கை குலுக்கியும், குழந்தையை தூக்கி கொஞ்சியும் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர், கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன் என கூறியுள்ளார். 

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி