பாலக்கோடு: நிவாரணம் கேட்டு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

65பார்த்தது
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காட்டு யானை தாக்கி இறந்த 3 பேரது குடும்பத்துக்கு அரசு நிவாரணம் கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அக்டோபர் 09 நேற்று மாலை நடந்தது. வட்ட தலைவர் நக்கீரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பெருமாள் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட தலைவர் குமார், மாவட்ட துணைத் தலைவர் மல்லையன் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி