மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ 6750 வழங்க கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் இ. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் ஆர். மதலைமுத்து, மாவட்ட பொருளாளர் சி. ஜானகிராமன், மாவட்ட துணைத் தலைவர் இ. சண்முகம், முன்னாள் மாநில நிர்வாகிகள் கே. துரை, எம். கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில இணைச் செயலாளர் கே. குப்புசாமி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் எம். பெருமாள், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே. புகழேந்தி, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
வருவாய் கிராம ஊழியர்களுக்கு வழங்குவது போல் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ. 6750 வழங்க வேண்டும். அகவிலைப்படி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஓய்வூதியர்களுக்கு ஈமச்சடங்கு நிதியாக ரூ.25000 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.