தர்மபுரி மாவட்டம் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட எஸ்பி ரோடு பிபிசி மண்டபத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் சமூக நல்லிணக்கத்திற்கு சமூகத்தில் அமைப்பு வரமா. சாபமா. என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தலைமை பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் காந்திநகர், அன்னசாகரம், குமாரசாமிப் பேட்டை, எம்ஜிஆர் நகர், நெசவாளர் காலனி, மதிகோன்பாளையம், உள்ளியிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.