தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

71பார்த்தது
ஜார்க்கண்ட் மாநிலம்தும்கா மாவட்டம் சரண்தங்கால் 4 பகுதியை சேர்ந்த முன்ஷா மகன் மத்தாள் (வயது 21). இவர் விவேகா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே சிக்னலில் நின்றபோது அவர் ரெயிலில் இருந்து கீழே இறங்கி விட்டார். பின்னர் ரெயில் சென்று விட்டது. இந்த நிலை யில் அவர் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்துள்ளார். சம்பவத் தன்று நடுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எம். வேட்ரப் பட்டி கிராம நிர்வாக அலுவ லர் மாலதி மொரப்பூர்போலீ சில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக் டர் வான்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி