3 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற ஹெல்மெட் கொள்ளையர்கள்

75பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்த மாதையன் மனைவி அருணா இருவரும். ஆசிரியர் தம்பதி. இவர்கள் நேற்று இருசக்கர வாகனத்தில் தர்மபுரி- அதியமான்கோட்டை இடையே எர்ரப்பட்டி மத்திய அரசின் சில்க்போர்டு அலுவலகம் எதிரே வந்தனர். மொபட்டில் வந்த ஆசிரிய தம்பதியினரை, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர் கண் இமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த அருணா கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு ஹெல்மெட் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி