கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் மீது வழக்கு பதிவு

76பார்த்தது
இண்டூர் அருகே பங்குநத்தம் கிராமத்தைச் சேர்ந்த
கவுரவன் மனைவி மாதுலட்சுமி (வயது 37). மாற்றுத்திறனாளி. இவர் தனது பெற்றோருடன் பங்குநத்தம் கிராமத்தில் வசித்து வருகிறார். தர்மபுரி தனியார் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வேலைசெய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து தனது 3 சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு டிபார்ட் மெண்ட் ஸ்டோருக்கு வேலைக்கு சென்றார். அப் போது கும்பளப்பாடி அருகே பின்னால் வந்த டிராக்டர் மாதுலட்சுமியின் மூன்று சக்கர வாகனம் மீது லேசாக மோதியதாக தெரிகிறது.
தனது வாகனத்தின் மீது மோதிய டிராக்டரை ஓட்டிச் சென்ற கும்பளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரிடம் ஏன் தனதுவாகனத்தின் மீது மோதினாய் என்று மாதுலட்சுமி கேட்டுள்ளார். இதில் சின்னசாமி மற்றும் மாதுலட்சுமி இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
தொடர்ந்து சின்னசாமிக்கு ஆதரவாக அவரது மகன் சிவகுமார் மற்றும் உறவினர் ஜெமினி ஆகிய இருவரும் மாதுலட்சுமியை இரும்பு கம் பியால் தாக்கியும், அவரைக் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக மாது லட்சுமி இண்டூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து சிவகுமார் மற்றும் ஜெமினி ஆகிய 2 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இண்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி