காதலியை கொன்று மயானத்தில் வீசிய காதலன்.. (வீடியோ)

8692பார்த்தது
உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் காதலியை காதலன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
திருமணமான பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவனை விட்டு பிரிந்து காதலனுடன் சென்றுவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, காதலிக்கு மற்றொருவருடன் பழக்கம் இருப்பதாக காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் அப்பெண்ணைக் கொன்று மயானத்தில் வீசியுள்ளார். அப்பெண்ணுக்காக காதலன் இரண்டரை லட்சம் செலவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி