சாலையில் தீடீர் பள்ளம்.. கவிழ்ந்த தண்ணீர் லாரி!

76பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே தண்ணீர் லாரி ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஓட்டுநர், ஒருவழியாக லாரியில் இருந்து தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர். தொடர்ந்து, சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் பள்ளம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: DinamaniDaily

தொடர்புடைய செய்தி