விஷச் சாராய பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

74பார்த்தது
விஷச் சாராய பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து ஏற்கனவே 29 பேர் உயிரிழந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விஜயா, தாமோதரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி