மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) இன்று (செப்.12) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவால் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இடதுசாரி இயக்கம் மற்றும் இந்திய அரசியலில் பெரும்தலைவராக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.