சைபர் மோசடி - ரூ.2.45 கோடி பணம் பறிப்பு..

54பார்த்தது
சைபர் மோசடி - ரூ.2.45 கோடி பணம் பறிப்பு..
புனேவைச் சேர்ந்த சகோதரர்களிடம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பெரும் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாயை சைபர் குற்றவாளிகள் அபேஸ் செய்துள்ளனர். வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான குற்றவாளிகள், பங்குச்சந்தையில் பெரும் லாபம் ஈட்டுவதாக கூறி சகோதரர்களை நம்ப வைத்து மிரட்டி ரூ.2.45 கோடி பணம் பறித்துள்ளனர். இதில் ஒருவர் ரூ.1.68 கோடியும் மற்றொருவர் ரூ.77.50 லட்சமும் இழந்துள்ளனர். இது குறித்து புகார் அளித்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி