கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புலிவலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி வெண்ணிலா (23) இவர் கடந்த 12 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் இயற்கை உபாதைக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் திட்டக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.