கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள வைத்தியநாதபுரத்தை சேர்ந்த அழகப்பன் மகன் ராஜா இவர் திட்டக்குடி அரசு பணிமனையில் பேருந்து டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் ராமநத்தம் பகு தியை சேர்ந்த 17 வயதுடைய நர்சிங் கல்லூரி மாணவியை தனது மோட்டார் கொட்டகைக்கு ராஜா அழைத்து சென்று அவரை பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் மாணவி 6 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி மாணவியின் குடும்பத்தினர் ராமநத்தம் காவல் துறையினரிடம் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ராஜாவை கைது செய்தனர்.