பண்ருட்டியில் லேசான காற்றுடன் மழை

65பார்த்தது
கடலூர் மாவட்டம், பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழையுடன் காற்று வீசி வந்தது. இந்த நிலையில் இன்று மாலை லேசான காற்றுடன் மழை பெய்து வருகிறது. பள்ளி விடும் நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டும், சிலர் குடை பிடித்தபடியும் சாலையில் செல்வதை காண முடிந்தது. மேலும் மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி