பண்ருட்டி: வரதராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாணம்

1550பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று முன்தினம் நடந்த உற்சவத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மாக சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி