மதுபானம் அருந்திவிட்டு தூங்கியவர் திடீர் மரணம்

50பார்த்தது
மதுபானம் அருந்திவிட்டு தூங்கியவர் திடீர் மரணம்
கோவை: கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் குமார் (42) இவர் குடும்பத்துடன் தனது சகோதரி மகள் திருமணத்திற்கு கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் சங்கர் குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்து அந்த பகுதியில் உள்ள கோவில் பின்புறம் படுத்து துாங்கினார். அவர் அசைவின்றி இருந்ததால் சங்கர் குமார் உயிரிழந்து கிடந்தது தெரிந்தது. இது குறித்த சாய்பாபா காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி