கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண்புரை சிகிச்சை முகாம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை மூலம் லென்ஸ் பொருத்தப்பட்டு தெளிவான பார்வை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.