மின் விசிறியில் பானி பூரி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை

73பார்த்தது
மின் விசிறியில் பானி பூரி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் வினோத் இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் பெருமாப்பட்டு கிராமத்தை சேர்ந்த அபித்தா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது. வினோத் ஸ்ரீ முஷ்ணம் அடுத்த நாச்சியார்பேட்டையில் பானி பூரி கடை நடத்தி வந்தார் இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அபித்தா, வினோத்திடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வினோத், அபித்தாவை சந்தித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அபித்தா மறுத்து விட்டார்.

இதனால் விரக்தியடைந்த வினோத் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ ருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினோத் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி