மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் உள்ளனர்.