சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக கார்த்தியாயினி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் எனது முதல் வாக்குறுதியாக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களை ஒரு வார காலத்திற்கு ஆன்மீகச் சுற்றுலாவாக குழந்தை ராமரை தரிசிக்க அழைத்துச் செல்வேன் என கூறினார்.