ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்

77பார்த்தது
ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் அறிவித்துள்ளார். 73 ஒருநாள் போட்டிகள், 9 டி20, 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கேதர் ஜாதவ், ஒருநாள் போட்டிகளில் 2 சதம் உள்பட 1,389 ரன்கள் சேர்த்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் இன்று (ஜுன் 3) அறிவித்துள்ள அவர், “எனது வாழ்க்கை முழுவதும் உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் நான் விடைபெறுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கேதார் ஜாதவ் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 95 போட்டிகளில் விளையாடி 123.14 ஸ்ட்ரைக் ரேட்டில் நான்கு அரைசதங்களுடன் 1208 ரன்கள் எடுத்துள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் ( தற்போது டெல்லி கேபிடல்ஸ்), கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி