சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் அருகேவுள்ள கத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் தொண்டமான். இவர் இலங்கையில் உள்ள தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவரிடம் மிகப்பிரபலமான காங்கேயம், புலி, பாகுபலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காளைகள் உள்ளன. இந்நிலையில் தனது பூர்வீக கிராமத்தில் பொதுமக்களுடன் செந்தில் தொண்டமான் மாட்டு பொங்கலை கொண்டாடினார்.