வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

58பார்த்தது
வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்குப் பின், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுவதால் , 45 நாட்களுக்கு மேல் மக்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கலானது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்த காலக்கெடுவும் இல்லை. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது" எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி