'நான் பேசும்போது எழுந்துசென்றால் ரத்தம் கக்கிச் சாவீர்கள்'

63பார்த்தது
'நான் பேசும்போது எழுந்துசென்றால் ரத்தம் கக்கிச் சாவீர்கள்'
மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். இதில், செல்லூர் ராஜு பேச ஆரம்பித்ததும் அதிமுகவினர் கூட்டத்திலிருந்து எழுந்து செல்ல முயன்றனர். இதனால் செல்லூர் ராஜு, "நான் பேசும்போது யாராவது எழுந்து சென்றார்கள் என்றால் அவர்கள் ரத்தம் கக்கிச் சாவார்கள்" என்று சிரித்தபடியே கூறியதுடன், "அதனால் நான் பேசி முடிக்கும் வரை யாரும் வெளியே செல்லக் கூடாது" என்று மைக்கில் சத்தமாகக் கூறினார். இதனால் அரங்கமே சற்று நேரம் கலகலப்பானது.

தொடர்புடைய செய்தி