கூட்டணி வைத்திருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்

83பார்த்தது
கூட்டணி வைத்திருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்
2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் சட்டப் போராட்டம் நடத்தியும் நாம் தமிழர் கட்சிக்கு பயனில்லை. இதனால் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சீமான், கடைசி நொடி வரை போராடி பார்த்தேன். ஆனால் சின்னம் கிடைக்கவில்லை. மக்கள் எங்களை கைவிட்டுவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம். கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி